ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் இந்த பிரபலமா? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

நடிகர் ஜெயம் ரவி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் என்ற தகவல் கசிந்துள்ளதை அடுத்து அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிரதர்’ புவனேஸ் அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெனி’ மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்த படத்தை இயக்க இருப்பது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யா நடித்து வரும் 44 வது படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஜெயம் ரவி படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த பேனரில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜெயம் ரவி இணையும் நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாக கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

 

More News

ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்.. நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்த மாஸ் தமிழ் நடிகர்..!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்

உங்கள் ராசிக்கு எந்த முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிட நிபுணர் சுபம் D.R. விஜயகுமார் அளித்த சிறப்பு பேட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களை அடையாளம் காட்டியுள்ளது.

'சூர்யா 44' படத்தில் 'கோட்' நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் விரைவில் 'சூர்யா 44 ' படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

என்னங்க இவ்வளவு காய்ஞ்சு போயா இருக்கீங்க.. சமீபத்திய சர்ச்சை குறித்து இயக்குனர் செல்வராகவன்..!

சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது

மனைவியிடம் இருந்து விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி..!

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.