இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை.. ஒரே ஒரு தீக்குச்சி போதும்: ஜெயம் ரவியின் அடுத்த பட அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

நடிகர் ஜெயம் ரவி, தற்போது ஜெனி, பிரதர்”, ’காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை, ஒரே ஒரு தீக்குச்சி போதும் என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த வீடியோ, ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ளது.

பி.டி.ஜி யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம், ஜெயம் ரவியின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஏற்கனவே தமிழில் ரெட்டை தல மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.ஜி யுனிவர்சல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தையும், ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும், இன்னொரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அருள் சக்தி முருகன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

மகிஷாசுரமர்த்தினி மந்திரம் : அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

பிக்பாஸ் புரமோ: பஞ்சாயத்தை பேசி முடிங்க நாட்டாமை.. கொசுத்தொல்லை தாங்க முடியலை

விஜய் டிவியில் கடந்த ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்? மகனை எப்படி ட்ரீட் செய்வார் தந்தை?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து

கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில

வரங்களை அள்ளித்தரும் வாராகி அம்மன்

வராகி அம்மன், தன் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு நன்மைகளை அளிக்கும் அன்புள்ள தெய்வமாக போற்றப்படுகிறாள்.