சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் ஜெயம்ரவி

  • IndiaGlitz, [Saturday,August 27 2016]

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியினை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் மகேஷ்பாபு கேரக்டருக்கு இணையான இன்னொரு கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
'தனி ஒருவன்' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் 'போகன், கவுதம் மேனன் படம், சுசீந்திரம் படம் என பெரிய இயக்குனர்களில் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள ஜெயம் ரவி, தற்போது மெகா பட்ஜெட் படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களில் ஒன்றான இந்த படத்தில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களான ஏ.ஆர்.ரஹ்மான், சாபுசிரில், கமலக்கண்ணன், சுதீப் சட்டர்ஜி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
'சங்கமித்ரா' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, அந்த படத்தில் நடித்து முடித்தவுடன் 'சங்கமித்ரா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்திற்கு மாஸ் ஹீரோ தயார்.

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் ஷங்கரின் எந்திரன்...

சூர்யாவின் 'எஸ் 3' படத்தில் இணைந்த பிரபல நடிகை

எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒருசில நடிகைகளில் ஒருவர் ராதிகா. கலைத்துறையின் பரம்பரையில்...

'பாகுபலி 2' படத்தில் எத்தனை கிளைமாக்ஸ்?

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' என்ற மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

மாதவன் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

'இறுதிச்சுற்று' வெற்றிக்கு பின்னர் மாதவனுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் இயக்குனர் சற்குணம் இயக்கும் படம்...

நாகேஷ் திரையரங்கத்தில் நயன்தாராவின் நாயகன்

'நெடுஞ்சாலை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் ஆரிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 'மாயா...