மனைவி குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த இன்ஸ்டாகிராம்.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

நடிகர் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, அவருடைய மனைவியின் குடும்பத்தினரே இதுவரை கையாண்டு வந்த நிலையில், தற்போது அந்த கணக்கை அவர் மீட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தியோ என்னுடைய சம்மதம் இல்லாமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ’பிரதமர்’ புரமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, தனது விவாகரத்து முடிவு குறித்து சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். மேலும், பாடகி கெனிஷாவை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம் என்றும், அவர் பல உயிர்களை காப்பாற்றியவர் என்றும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு மையத்தை அமைக்க இருக்கிறோம், மேலும் பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவருடைய மனைவியின் குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாக கூறிய நிலையில், தற்போது அவர் அந்த கணக்கை மீட்டுள்ளார். அதில் முதல் பதிவாக புதிய நான் என குறிப்பிட்டுள்ளதை அடுத்து இனிமேல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாவில் இருந்த ஆர்த்தியின் புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.

 

More News

பிக்பாஸ்ன்னா இப்படி இருக்கனும்.. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நாகார்ஜூனா..!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிக்கும் மம்முட்டி.. ஹீரோவாக நடிக்கும் 'ஜெயிலர்' வில்லன்.. ஆச்சரிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி

'சத்யா' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு... இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'சத்யா' திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானதை அடுத்து, கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்

சமந்தா குடும்பத்தில் நடந்த ஒரு ஜாம் ஜாம் திருமணம்.. க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை சமந்தாவின் குடும்ப உறுப்பினருக்கு வெளிநாட்டில் ஜம் ஜாம் என திருமணம் நடந்த நிலையில், அந்த திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

நயன்தாரா எதுவும் சொல்லலையா? பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்த விக்னேஷ் சிவன்..!

பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள நிலையில், இந்த  வீடியோவுக்கு நயன்தாரா எதுவும் சொல்லவில்லையா? என்பது போன்ற கமெண்ட்கள்