ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 3 பட அப்டேட்டுகள்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

நடிகர் ஜெயம் ரவி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ’பிரதர்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி வெளியாகும் என இன்று காலை அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் ஜெயம் ரவி நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் வீடியோ ஒன்றை இயக்குனர் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 47 வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜெயம் ரவி நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’ஜெனி’. அறிமுக இயக்குனர் புவனேஸ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அலாவுதீன் பூதத்தை போல் இருக்கும் இந்த போஸ்டரில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா அபி ஆகிய இருவரும் தேவதை போல் தோன்றுகின்றனர். அலாவுதீன் கம்பளத்தில் வானத்தில் ஜெயம் ரவி மற்றும் இரு ஹீரோயின்களும் பறக்கும் வகையில் இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே இது ஒரு மேஜிக்கல் படம் என்பது தெரிய வருகிறது.

ஜெயம் ரவியின் பிறந்த நாளில் அவர் நடித்து வரும் மூன்று படங்களின் அறிவிப்புகளளால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

More News

ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் இந்த பிரபலமா? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் என்ற தகவல் கசிந்துள்ளதை

ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்.. நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்த மாஸ் தமிழ் நடிகர்..!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்

உங்கள் ராசிக்கு எந்த முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிட நிபுணர் சுபம் D.R. விஜயகுமார் அளித்த சிறப்பு பேட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களை அடையாளம் காட்டியுள்ளது.

'சூர்யா 44' படத்தில் 'கோட்' நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் விரைவில் 'சூர்யா 44 ' படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

என்னங்க இவ்வளவு காய்ஞ்சு போயா இருக்கீங்க.. சமீபத்திய சர்ச்சை குறித்து இயக்குனர் செல்வராகவன்..!

சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது