ஜெயம் ரவியின் 30வது படத்தின் சூப்பர் அப்டேட்!    

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் நாயகன் ஜெயம் ரவி, நாயகி பிரியங்கா மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஊட்டியில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படம் அண்ணன் தங்கை கதை அம்சத்தை கொண்டது என்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் உணர்வுபூர்வமான ஒரு அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட படத்தை காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் என்றும் அதன் பிறகு ஊட்டியில் இருந்து சென்னை திரும்பும் படக்குழுவினர் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் மற்றும் விடிவி கணேஷ் முக்கியவேடத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.