ஜெயம் ரவி பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

ஜெயம் ரவி நடித்த படத்தின் நாயகிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷின் ’வாட்ச்மேன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அவரை சம்யுக்தா தான் கவனித்துக் கொண்டார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவருடைய பெற்றோர்கள் கொரோனாவில் இருந்து குணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சம்யுக்தாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

'தளபதி 65' ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'அண்ணாத்த' படத்தை தீபாவளி

நடிப்பு நாயகன் மோகன்லாலுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை

மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல நடிகர்: வைரல் வீடியோ

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள

இதை கட்டாயமாக்கினால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல்