மனைவியிடம் இருந்து விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. மேலும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும் இந்த முடிவு மிகவும் கடினமாக எடுக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்தியின்படி மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் ’2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது என செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்த நாளில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

எதற்கும் தயாராக இருக்க வேண்டும்: நடிகைகள் பாலியல் விவகாரம் குறித்து சன்னி லியோன்..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு

நான் குழந்தை பெற்றால் செத்துவிடுவேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

நான் குழந்தை பெற்றால் நானும் செத்து விடுவேன், எனக்கு பிறக்கும் குழந்தையும் செத்துவிடும் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான்கான் படத்தில் இணைந்த 'துப்பாக்கி' நாயகி.. குவியும் வாழ்த்துக்கள்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது

நமக்கு நாளை இருக்குமா என்பது தெரியாது? விபத்தில் சிக்கிய ராஷ்மிகா தத்துவ கருத்து..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் 'நமக்கு நாளை என்பது இருக்குமா என்றே தெரியாது, எனவே நம்மை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்'

ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ள நிலையில்