மீண்டும் ஜெயம் ரவி வெளியேறுகிறாரா? அவருக்கு பதில் இவரா? 'தக்லைஃப்' படத்தில்  என்னதான் நடக்குது?

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாகவும் அதன் பின் மீண்டும் இருவரும் இணைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஜெயம் ரவி விலகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருவரும் விலகியதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மீண்டும் இந்த படத்தில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜெயம் ரவி மட்டும் மீண்டும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் அசோக் செல்வன் இணைவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு இணைந்துள்ள நிலையில் தற்போது அசோக் செல்வம் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜெயம் ரவி விலகியது குறித்தும் அசோக் செல்வன் இணைவது குறித்தும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தகவலை வெளியிடவில்லை என்பதும் அவர்கள் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதை செய்யலைன்னா சுந்தர் சியை திட்டுவேன்.. சிம்ரன் முன்னிலையில் கூறிய குஷ்பு..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி வார இறுதியில் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் சுந்தர் சி அவர்களுக்கு ஒரு வெற்றி படமாகவே

திடீரென நடுகாட்டிற்கு சென்று குதித்து விளையாடும் அமலாபால்.. என்ன ஆச்சு?

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென நடுக்காட்டில் குதித்து விளையாடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டெல்லியில் 'தக்லைஃப்' படப்பிடிப்பு.. கமல்ஹாசனுடன் யார் யார்? இன்று ஒரு சர்ப்ரைஸ் இருக்குது..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டெல்லியில்

த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..

நடிகை த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்