close
Choose your channels

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்து மோகன் ராஜா

Thursday, May 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனி ஒருவன்' படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா, தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் உள்பட பலர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய மோகன்ராஜா, 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாக அமையும் என்றும் இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி, தம்பிராமையா உள்பட பலர் நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் அரவிந்தசாமியின் கேரக்டர் கிளைமாக்ஸில் சுட்டு கொல்லப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இரண்டாவது பாகத்தில் அரவிந்தசாமி நடிப்பாரா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment