ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு குவியும் சிலை ஆர்டர்கள்

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவர் செய்த பல சிலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததோடு, அவரது சிலை அமைப்பையும் பலமுறை பாராட்டியுள்ளார். இவ்வாறு ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு தற்போது ஜெயலலிதாவின் சிலையை செய்ய ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

கடந்த 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவருடைய சிலையை தமிழகத்தின் பல பகுதிகளில் வைக்க அதிமுக தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவருக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து குறிப்பாக குடியாத்தம், பொள்ளாச்சி, மணப்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ஜெயலலிதா சிலைகள் செய்ய ஆர்டர்கள் வந்துவண்ண உள்ளதாம்.

சமீபத்தில் புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் ஏழு அடி உயரமுடைய ஜெயலலிதா உருவச்சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது., இவர் வடிவமைத்த 20க்கும் மேற்பட்ட எம்ஜிஆர் சிலைகள் தர்மபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். தமிழகம் முழுவதும் இவர் செய்த 30 சிலைகளை ஜெயலலிதாவே தனது கையால் திறந்துவைத்துள்ளாராம். இதுவரை எம்.ஜி.ஆர் சிலைகள் செய்வதற்கு மட்டுமே ஆர்டர்கள் அதிகளவு வந்ததாகவும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெயலலிதா சிலைகள் செய்யவும் அதிகளவு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவற்றை செய்வதில் முழுமூச்சுடன் பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

யார் இந்த சேகர் ரெட்டி? வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியது எப்படி?

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய வருமான வரித்துறையினர்களின் சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா இறந்த தினத்தில் ராம்மோகன் ராவ் செய்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில்...

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் ஆன பெண் ஐஏஎஸ் அதிகாரி

தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் நேற்று விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை...

சமந்தாவின் 'சாவித்திரி' கனவு என்ன ஆயிற்று?

கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா...

விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம். கீர்த்திசுரேஷ்

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ்...