ரஜினியின் பகுதி நேர அரசியல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

அரசியல் குறித்த கேள்விகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு நேற்று பதிலளித்த ரஜினிகாந்த், 'தான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்றும், அதனால்தான் அரசியல் குறித்த கேள்விகளுக்கு தான் பதிலளிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்

இந்த நிலையில் ரஜினியின் பகுதிநேர, முழுநேர அரசியல் குறித்து இன்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, அவர் 'பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கும் ரஜினி விரைவில் அரசியல் ஊழியராக மாறுவார்' என்று கிண்டலாக கூறியுள்ளார்.

ரஜினி ஒரு விஷயம் குறித்து கருத்து கூறினாலும் சரி, கருத்து கூறாமல் சென்றாலும் சரி, அதுதான் ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறுகிறது. பகுதி நேர அரசியல்வாதியாக ரஜினி இருக்கும்போதே அவர் ஊடகங்களிலும், சமூக  வலைத்தளங்களிலும் டிரெண்டில் உள்ளதாகவும், அவர் முழுநேரம் அரசியலுக்கு வந்தபின்னர் பலர் காணாமல் போய்விடுவார்கள் என்றும் ரஜினியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்யுடன் நடித்தால் தான் பெரிய நடிகையா? ஆதங்கத்தில் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது திரையுலகம் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கே வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாகவும்,

தனியார் கேப் நிறுவனத்தை கதற வைத்த நடிகை பார்வதிநாயர்

என்னை அறிந்தால்', 'உத்தமவில்லன்' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக தனியார் கேப் நிறுவனம் ஒன்றில்

படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76

நடிகை ஹன்சிகா மீது பகீர் புகார்

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.