ஒருவழியாக டேக் ஆஃப் ஆகும் ஜேசன் சஞ்சய் படம்.. இனி அடுத்தது படப்பிடிப்பு தான்..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு ஒரு ஆண்டுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட தகவல் எதுவும் வெளிவராததால் இந்த படம் ட்ராப் என்று கூட சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்ததில் இருந்து இந்த படம் டிராப் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என பெரிய படங்களில் இதுவரை கவனம் செலுத்தி வந்த லைகா நிறுவனம் தற்போது அந்த பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்ததை அடுத்து ஜேசன் சஞ்சய் படத்திற்கு ஸ்கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முழு திரைக்கதையையும் எழுதி முடித்து விட்ட ஜேசன் சஞ்சய், இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின் உள்பட நடிகர்களையும் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் விரைவில் இந்த இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் முதல் படத்தை விஜய்யின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.