ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் நாயகன் இவரா? லிஸ்ட்லேயே இல்லையே!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவின் உட்பட சிலர் நாயகனாக நடிப்பார்கள் என்று கூறப்பட்டாலும் இதுவரை நாயகன் யார் என்பதை ஜேசன் சஞ்சய் முடிவு செய்யவில்லை என்றும் ஒரு சில நடிகர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. துருவ் விக்ரம் ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்திலும் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

More News

விஜயகாந்த் கதை கேட்டு ஓகே சொன்ன படம்.. சண்முகபாண்டியன் அடுத்த படத்தின் அப்டேட்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவரது மகன் சண்முகபாண்டியன் 'படைத்தலைவன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து 'குணா' நாயகி வெளியேறியது ஏன்? 33 ஆண்டு ரகசியம்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம்

இந்த ஜோடி 14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறது மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் மோதிரங்களை மாற்றிக்கொண்டது.

நடிகர் சரத்குமார் மகள் மற்றும் நடிகையுமான வரலட்சுமிக்கு நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

துபாயில் எனக்கு  அரசியல்வாதி வீடு வாங்கி கொடுத்தாரா? ஆவேச அறிக்கை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்..!

அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு பிரபல அரசியல்வாதி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளது

'எஞ்சாயி எஞ்சாமி' மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?  சந்தோஷ் நாராயணன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது