எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்த எல்லா விஷயங்களும் 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமாருக்கு தெரியும் என்று, காவல்துறை விசாரணையின் போது, ஜானி மாஸ்டர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஆன ஜானி மாஸ்டர் மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, அவர் நான்கு நாள் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசாரிடம், என் மீது புகாரளித்த இளம்பெண் தானாகவே வந்து என்னிடம் வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை அறிந்து, நான் தான் அவரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன்.

ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்யவும், மிரட்டவும் செய்தார். இதை நான் 'புஷ்பா' இயக்குனர் சுகுமாரிடம் கூறினேன், அவர் அந்த பெண்ணூக்கு அறிவுரை கூறினார். ஆனாலும் அந்த பெண் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான புகாரை கூறியுள்ளார்.

இந்த புகாரின் பின்னணியில், எனக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை பழிவாங்குவதற்காக இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளனர், என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News

'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மாதம்பட்டி ரங்கராஜ் கன்னத்தில் பளார் பளாரென அடித்த நடிகை.. வைரல் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மிஸ் மேகி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜே சித்ரா வழக்கில் கணவர் விடுதலை.. தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார் பந்தயத்தில் கலந்து கொள்வது மட்டுமல்ல.. அஜித் குறித்து சுரேஷ் சந்திரா கூறிய வேற லெவல் தகவல்..!

நடிகர் அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்