close
Choose your channels

பயங்கர ஷாக்கான விஷயம்: ஜெயம் ரவியின் பேட்டி!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஜனநாதன் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’பேராண்மை’ என்ற படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாதன் சார் அவர்கள் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. எங்கள் வீட்டில் எந்த ஒரு விழா நடந்தாலும் அவர்கள் இல்லாமல் நடக்கவே நடக்காது. இயக்குனர் என்பதை எல்லாம் தாண்டி அவர் எனக்கு ஒரு சகோதரர் மாதிரி. எப்பொழுதும் என்னுடைய நலனில் அவருக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கும். எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அவரது மறைவு எனக்கு மிகவும் ஒரு ஷாக்கிங் ஆன விஷயம், அவரது ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி அவரை விட ஒரு சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை. ரொம்ப சீக்கிரமாக நம்மை விட்டுப் போய்விட்டாரே என்று எல்லோருக்கும் வருத்தம்.

அவருடைய படங்கள் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். கண்டிப்பாக அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதே உண்மை. அவருடன் நான் இத்தனை வருடங்கள் பயணம் செய்தது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எனக்கும் சரி சக நடிகர்களுக்கும் சரி பல விஷயங்களை அவர் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார். அவர் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்’ என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment