மெரினாவில் மின்சாரம் கட். செல்போன் ஒளியில் தொடரும் போராட்டம்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

மக்கள் சக்தி குறிப்பாக இளைஞர்கள் சக்தி ஒன்றிணைந்து விட்டால் அதை அடக்க யாராலும் முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேரம் ஆக ஆக எழுச்சியுற்று வருவதை பார்த்து கொண்டிருக்கின்றோம். முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்பதில் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தின் வீரியத்தை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்த அரசு, தற்போது மெரினா பகுதியில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. எனினும் நமது எழுச்சியுள்ள இளைஞர்கள் செல்போன் விளக்கொளியில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் வெற்றி பெற்று தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் எண்ணமாக உள்ளது.

More News

நான் ஜல்லிக்கட்டு எதிரானவன் அல்ல. விஷால்

ஜல்லிகட்டு போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் பீட்டாவுக்கு எதிரான குரலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் பீட்டாவுக்கு ஆதரவு அளித்த திரையுலகினர் மீது கடுமையான விமர்சனம் பாய்ந்து வருகிறது...

நீதிமன்றத்தில் வெற்றி, மக்கள் மன்றத்தில் தோல்வி. பீட்டா குறித்து சூர்யா

ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் முழுவதும் உணர்ச்சிபூர்வமான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது...

பீட்டாவுக்கு ஆதரவாக த்ரிஷா தொடர்ந்து செயல்படுவாரா? தாயார் உமா விளக்கம்

நடிகை த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்பதால் சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே த்ரிஷாவின் படப்பிடிப்புக்கு பிரச்சனை ஏற்பட்டது

குடியரசு தினம் கருப்பு தினமாக மாறும். மாணவர்கள் எச்சரிக்கை

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராடிய இளைஞர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவின் 'எஸ் 3' டைட்டில் திடீர் மாற்றம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா தினத்தில் வெளியாகவுள்ளது.