ஜெயிலர் இயக்குநர் நெல்சன்க்கு பிறந்தநாள்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவருடைய மனைவி இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கினார். காமெடி கலந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெற்றார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் விற்பனை தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் இயக்குநர் நெல்சனுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1984 ஜுன் 21 இல் வேலூரில் பிறந்த நெல்சனுக்கு மோனிஷா என்ற மனைவியும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா தனது இன்ஸ்டா பதிவில் ‘ஹேப்பி பர்த்டே நெல்சன், இந்த வருடம் அற்புதமான வருடமாக அமையட்டும்‘ என வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இயக்குநர் நெல்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிவரும் அவரது ரசிகர்கள் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

திருமணமான பெண் விரும்பிய நபருடன் வாழலாம்… நீதிமன்ற தீர்ப்பால் குமுறிய கணவர்!

உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் காணாமல் போன தனது மனைவியை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரும்பிய ஆணுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகிறார்...

தொடங்கியது 'ஜெயிலர்' படத்தின் பிசினஸ்.. வெளிநாட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக

நள்ளிரவு திடீரென கணவர் மீது போலீஸ் புகார் கொடுத்த ரக்சிதா .. என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீ- addict-ஆ நீங்க? உங்களுக்கான தீர்வு 'வெள்ளை-டீ'… கண்டிப்பா டிரை பண்ணுங்க…

நம்மூரில் டீ-க்கு அடிமையாகாத ஆசாமிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தலைவலியா? ஒரு டீ குடிப்போம்… சலிப்பா இருக்கா? ஒரு டீ குடிப்போம்… வீட்டை விட்டு வெளியே போறோமா? ஒரு குடிப்போம்

இந்த வார ஓடிடியில் 3 தமிழ்ப்படங்கள்.. அருள்நிதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் தமிழ் படங்கள் உட்பட மற்ற மொழி படங்கள் ஏராளமாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருள்நிதி நடித்த படம் உள்பட 3 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.