கமல் டைட்டில், மூன்று ஹீரோயின்கள்: ஜெய் காட்டில் மழை

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் மற்றும் கலகலப்பு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது 'நீயா 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கி வருகிறார்

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், கேதரின் தெரசா ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது ராய்லட்சுமியும் இணைந்துள்ளார். ஜெய், ராய்லட்சுமி இருவரும் 'வாமனன்' படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ராய்லட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக தமிழில் இரண்டாம் பாக படங்கள் அதிகம் தயாராகி வரும் நிலையில் 1979ஆம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடித்த 'நீயா' படத்தின் இரண்டாம் பாகமாக 'நீயா 2' திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இருப்பினும் இச்சாதாரி பாம்பு ஒன்று பழிவாங்கும் முதல் பாகத்தின் கதைதான் இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்குமா? அல்லது இந்த படம் முற்றிலும் வேறு கதையம்சம் கொண்டதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

ரஜினியின் 'காலா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டர்: தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' மற்றும் 'காலா; ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவ்வருடம் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும்

இரண்டாவது படத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தனுஷ்

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார்

இரண்டே மாதத்தில் விடிய போகும் 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது குறித்து பார்த்தோம்.

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்