இன்று ஜெய்-அஞ்சலியின் முதல்நாள்

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]

ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் இதே ஜோடி ஒரு படத்தில் இணைந்துள்ளது என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அஞ்சலி மற்றும் ஜெய் இருவருமே தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஐந்து வருடங்கள் கழித்து ஜெய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் ஜெய்க்கு 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.