இன்று முதல் மீண்டும் ஒன்றுசேரும் ஜோடி

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெய் மற்றும் பிரபல அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு இவர்களது கெமிஸ்ட்ரியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜெய்-அஞ்சலி இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்ததும் உண்டு.
இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த தகவலை ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவருமே தங்களது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ரொமான்ஸ் மற்றும் திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரவுள்ளது.