ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஜெய்-அஞ்சலி மீண்டும் ஜோடியாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சார் ஆகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு  சென்சார் அதிகாரிகள் எந்தவித 'கட்'டும் செய்யாமல் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள பலூன் படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.