அஞ்சலி பிறந்த நாளை மறந்த ஜெய்! என்ன ஆச்சு பலவருட காதல்?

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய் மீது அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்ததும் அறிந்ததே. ஜெய், அஞ்சலி இருவரும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இன்னொருவர் வாழ்த்து சொல்வது கடந்த சில ஆண்டுகளாக இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு அஞ்சலி பிறந்த நாளின்போது ஜெய் எழுதிய கவிதை இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலியின் பிறந்த நாள் வந்தபோது ஜெய் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. எனவே இருவரின் காதலில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த 'பலூன்' படமும் இருவரும் தனித்தனியாக நடித்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இருவரும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதுவரை காதலை ஒத்திபோட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெய் தற்போது 'ஜருகண்டி' படத்திலும் அஞ்சலி தற்போது மூன்று திகில் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சினிமாவில் ஒருசில வெற்றி படங்கள் கொடுத்த பின்னர் மீண்டும் இந்த ஜோடி இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ராகுல்காந்தியை சந்திக்கின்றார் கமல்! புதிய கூட்டணியா?

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாக உள்ளார். 'விஸ்வரூபம் 2' ரிலீஸ், 'பிக்பாஸ்  2' ஆகிய பணிகளுக்கு இடையே அவர் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அருண்விஜய்க்கு கால்ஷீட் தர மறுத்த விஜய்! ஏன் தெரியுமா?

விஜய் நடிக்கும் படம் ஒன்றை தான் தயாரிக்க விரும்பி, அவரை கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கால்ஷீட் தராமல் அவர் கொடுத்த அறிவுரை

முன்ஜாமீன் கிடைக்காத எஸ்.வி.சேகருக்கு கிடைத்த ஜாமீன்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

காயத்ரியாக உருமாறிய மும்தாஜ்: நெட்டிசன்கள் அலசல்

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வரவேண்டும் என்று விரும்பிய மும்தாஜ், தனக்கு அந்த பதவி கிடைக்காமல் தன்னைவிட வயதில், அனுபவத்தில் குறைந்த ஜனனிக்கு

பாலாஜி-நித்யா மோதல்: பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் சண்டை

பிக்பாஸ் வீட்டில் எப்போது முட்டல் மோதல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த சண்டையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.