பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி

  • IndiaGlitz, [Tuesday,April 16 2019]

நேற்று உலகக்கோப்பை கி்ரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் ஜடேஜா. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபின் ஜடேஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதிவு செய்திருந்தார்

இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உலகக்கோப்பையில் அணியில் இடம்பெற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். ஆமா; பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜாவுக்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் தான் ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங் மற்றும் சகோதரி நைனாபா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் தந்தையும் சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்க, இன்னொரு பக்கம் ஜடேஜாவின் மனைவி பாஜகவில் இணைந்ததோடு, தற்போது ஜடேஜாவும் தனது முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்துள்ளார். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டு தேசிய கட்சியில் இருப்பதால், இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் ஜடேஜா குடும்பத்திற்கு சாதகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

 மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி.

காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது

மீண்டும் பாட வந்த காந்தக்குரல் பாடகர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.

இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும்

ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது