சிறந்த மனிதர்: ரக்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜாக்குலின்

விஜய் டிவியில் பார்வையாளர்களால் பெரும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியை அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்காக பார்த்ததை விட தொகுத்து வழங்கும் ஜாக்லின் மற்றும் ரக்சனுக்காக பார்த்தவர்கள் அதிகம் என்பதும், அந்த அளவுக்கு இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி மற்றும் டைமிங் ஜோக்குகள் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இன்று ரக்சன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரக்சன் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த பிறந்தநாள் அவருக்கு வெற்றி பிறந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ரக்சனின் சக நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஜாக்குலின் தனது சமூக வலைத்தளத்தில் ரக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த மனிதரான ரக்சனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரை தற்போது பெரிய திரையில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த வருடம் அவருக்கு திரைத்துறையில் அதிக வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். ஜாக்குலினின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

போலீஸ் கெடுபிடியால் 65 வயது தந்தையை 1 கிமீ தோளில் தூக்கி சென்ற மகன்: நெகிழ்ச்சி வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்றும் இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக

கொரோனா பலியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் அமெரிக்கா!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகச்சுகாதார அமைப்பு எப்படி செயல்படுகிறது??? கொரோனாவில் இதன் பங்கு!!!

கொரோனா நோய்த்தொற்றுப் பற்றிய விவரங்களை சீனா பொதுவெளியில் மறைத்துவிட்டதாகவும்

இந்த விடுமுறையில் பிரபல நடிகைகள் அனைவரும் பார்த்த ஒரே படம் இதுதான்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் வீட்டில் சும்மா உள்ளனர்.

இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி