இது வைரமுத்து திருப்பி அடிக்கும் நேரமா?

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

கடந்த சில நாட்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு சோதனையான நாட்கள் என்றே சொல்லலாம். இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அவர் கூறிய பின்னரும் அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையே ஒருசிலர் அநாகரீகமாக விமர்சனம் செய்தனர்,

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது எழுந்து நிற்காமல், தேசிய கீதம் இசைக்கும் போது மட்டும் எழுந்து நின்றது பெரும் சர்ச்சையாக கருதப்படுகிறது. இதுகுறித்து சமூக இணையதளங்களில் சங்கராச்சாரியருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

'தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை' என்று கூறியுள்ளார்.

மேலும் தந்தை பெரியார் இயக்கம், 'தமிழ்த்தாயை அவமதித்த சங்கராச்சாரியர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. ஆக, இதுவரை ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வைரமுத்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் திருப்பி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் சேரவும், இராமநாதபுரத்தில் நடைபெறும் முதல் மாநாட்டில் பங்குபெறவும் பல கோலிவுட் திரையுலகினர் முன்வந்துள்ளனர்

God Sex and Truth படத்தை எந்த இணையதளத்தில் பார்க்கலாம்: ராம்கோபால் வர்மா தகவல்

இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் உருவான வெப் திரைப்படம் God Sex and Truth. இந்த படத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார்.

நாகரீக அரசியலை நோக்கி கமல்-ரஜினி

திராவிட இயக்கங்களை அடுத்து கமல், ரஜினி கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து கட்டண உயர்வு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி இரவில் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டணங்கள் 50%க்கும் அதிகமாக இருப்பதால் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்

எனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டார்கள்: சுவிஸ் நாட்டில் உளறிய பிரதமர்

உலக பொருளாதார மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, தனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டதாக தவறுதலாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.