ஜெமினியை சாவித்ரி காதலித்தது தவறு, எல்லோருக்கும் ஒரு Dark side உண்டு... Actor ராஜேஷ்,

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

நடிகை சாவித்ரியோடு Private Affair ல் ஈடுபட்ட சிலரை எம்.ஜி.ஆர் கூப்பிட்டு மிரட்டினார் என்றும், வாழ்க்கையில் எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்கிறது என்றும் நடிகையர் திலகம் சாவித்ரி குறித்து நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த பேட்டியில் பேசியிருப்பதாவது;-

நான் ஷூட்டிங்கில் இருந்தபோது, அதன்பின்புற வீட்டில்தான் சாவித்ரி இருந்தார். நான் பார்க்க சென்றிருந்தேன். அவர் மகன் சதீஷ்தான் உள் அழைத்து சென்றார். அப்படி அவரை நான் பார்த்ததை மறக்க முடியாது. உடலில் உயிர் மட்டும்தான் இருந்தது.

சாவித்ரி ஜெமினிகணேசனை திருமணம் செய்திருக்க கூடாது. அவர்தான் குடிக்க சொல்லிக்கொடுத்தார் என்றும் சொல்ல கூடாது.

சாவித்ரி சொத்து போய்விட்டது, வீடு ஜப்திக்கு வந்துட்டது அவரிடம் கொடுக்க ஒன்றும் இல்லை. அப்போது அவர் கார் ஓட்டுநர் அம்மா நான் போகிறேன் என்று சொன்னபோது, அவர் பயன்படுத்திய காரை டிரைவரிடம் கொடுத்துவிட்டார். அந்த டிரைவர் கேரளா சென்று நிறைய பொருளீட்டி சமீபத்தில்தான் இறந்தார்.

ஜெமினி ஒரு Orthodox பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். சாவித்ரியும், ஜெமினியும் பல காலம் பிரிந்து வாழ்ந்தும், சாவித்ரி மறைந்தபோது அவரை ஜெமினி தன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார். அதற்கு ஜெமினியின் முதல் மனைவி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

சாவித்ரிக்காக எம்.ஜி. ஆர் கெட்ட பெயரை அவர் ஏற்றுக்கொண்டார். சாவித்திரியின் Private Affair ல் ஈடுபட்ட சிலரை கண்டித்திருக்கிறார். சிலரை பழிவாங்கியும் இருக்கிறார்.

ஆனால், சாவித்ரிக்கு எம். ஜி. ஆர் உடன் நடிப்பதில் பெரிய ஈடுபாடில்லை. ஜெமினி மாமா மீது இருந்த அதீத காதல்தான் சாவித்ரியின் வீழ்ச்சிக்கு காரணம்.

சென்னை, பக்கத்துல பிராப்தம் னு ஒரு படம் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள சூர்யகாந்த் என்ற நபர் உள்ளுர்வாசி. செல்வாக்கு மிக்கவர். அவர் சாவித்ரியை பார்த்து பாசமலர் படம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார். அங்கு ஷூட்டிங்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்துள்ளார். ஒரு நாள் ஒரு பெரிய மீனை எடுத்துக்கொண்டு சாவித்ரி வீட்டுக்கு வந்துட்டார்.

சாவித்திரியும் அந்த மீனை அப்போதே சமைத்து இரவு உணவாக அந்த ரசிகனுக்கு கொடுத்து, இரவு தங்கவைத்து, காலையில் காபியும் கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார். எந்த நடிகையும் இப்படி செய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு சாவித்ரி குறித்த பல்வேறு விஷயங்களை நடிகர் ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

More News

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட ரம்பா மகள்.. தமிழ் சினிமா ஹீரோயின் ஆவாரா?

நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படத்தில் ரம்பாவின் தோளுக்கு மேல் வளர்ந்த அவரது

ஆந்திராவில் ஜெமினி வில்லன், அக்காவோடு மன வருத்தம்... சாவித்ரி மகள் விஜயா சாமுண்டீஸ்வரி

நடிகர் ஜெமினிகணேசனுக்கும், நடிகை சாவித்ரி தம்பதியர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

'எதிர்நீச்சல் 2' சீரியலில் இருந்து விலகிய முன்னணி நடிகை.. என்ன காரணம்?

சன் டிவியில் ஒளிபரப்பான "எதிர்நீச்சல்" சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா, கமல்ஹாசனை அடுத்து சிவகார்த்திகேயன் எச்சரிக்கை: என்ன நடந்தது?

லைகா நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எச்சரிக்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு மூடு விழாவா? விஜய் டிவியில் புது குக்கிங் ஷோ..

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.