ராம்மோகன் ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ். இன்று ஆஜராக உத்தரவு

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

முன்னள் தலைமைசெயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ராமமோகன ராவ் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமமோகன ராவ் மட்டுமின்றி அவருடைய மகன் விவேக்கும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை இருவரிடமும் விசாரணை செய்ய உள்ளனர்.

ஏற்கனவே பதினாறு கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ராமமோகன ராவ் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய நாடே மிகவும் பரபரப்புடன் காத்து கொண்டிருக்கின்றது.

More News

'பைரவா' படத்தின் ஸ்பெஷல் கிரிக்கெட் ஃபைட். அனல் அரசு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து சமீபத்தில் ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரே நாளில் 'பவளக்கொடி'யை முடித்த நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'டோரா' என்ற திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு. இ-காமர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்ததில் இருந்து வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது

விவாகரத்து விஷயத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக கணவர் அஸ்வினிடம் இருந்து பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை செளந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே உறுதி செய்திருந்தார்.

நயன்தாரா ஏன் முதல் இடத்துல இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். 'டோரா' இயக்குனர்

'மாயா' வெற்றி படத்தை அடுத்து நயன்தாரா நடிக்கும் அடுத்த பேய்ப்படம் 'டோரா'. சற்குணம் தயாரிப்பில் அவரது சிஷ்யர் தாஸ் ராமசாமி இந்த படத்தை இயக்குகிறார்.