ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள். இஸ்ரோவின் உலக சாதனை.

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இணைத்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த சாதனைக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பாரத பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி சி-37 என்ற ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை செலுத்தும் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளது.
வரைபடப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள், புவியியல் சார்ந்த அம்சங்கள் என பலவிதங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு இந்த செயற்கைக்கொள்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் இந்த உலக சாதனையை பல ஊடகங்கள் கண்டுகொள்ளாமல், இன்னும் சசிகலா சம்பந்தப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது துரதிர்ஷ்டமான ஒரு நிலையாக கருதப்படுகிறது.

More News

ஜெ. நீக்கிய இருவர் மீண்டும் அதிமுகவில். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தண்டனையை உறுதி செய்த நிலையில் இன்று அவர் பெங்களூரில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மீண்டும் நடிப்பில் முழுகவனம் செலுத்தும் பிந்துமாதவி

கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிந்துமாதவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர்-தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்படவும் செய்தது...

அடுத்த கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'அறம்'

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் 'அறம்'

ஜெயம் ரவி: முடிந்தது 'வனமகன்', மீண்டும் தொடங்கியது 'டிக் டிக் டிக்'

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போகன்' நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் திருப்திகரமாக அமைந்த படமாக இருந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத