தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்த விருது: பத்மவிபூஷன் குறித்து இளையராஜா

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான பத்மவிபூஷன் விருது சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இசைஞானிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாளை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட உள்ளது.

தனக்கு கிடைத்த விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியபோது, 'பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்

ஏற்கனவே இளையராஜா அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதினை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

GST ரிலீசுக்கு முந்தைய நாளில் ராம்கோபால்வர்மா மீது வழக்குப்பதிவு!

GST என்று கூறப்படும் 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

சசிகுமார்-சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' டெக்னீஷியன்கள் அறிவிப்பு

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

எது கண்ட இடம்? கமல்ஹாசனுக்கு சீமான் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானம் செய்தது குறித்து கமல் இன்று கூறியபோது, 'இதற்குத்தான் கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டாம் என்று கூறினேன்.

கைதிகளுக்கும் மனைவியுடன் உறவு கொள்ள உரிமை: ஆயுள் கைதிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த நீதிமன்றம்

கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களும் மனிதர்களே! சிறைக்கு செல்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேற வேண்டும் என்பதே சிறைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம்.

20 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் 'ஒடியன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து இளமையாக காட்சி தரும் மோகன்லால், பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.