கிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா??? இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி!!!

 

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இன வேறுபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் காவலில் இறந்த சம்பவம் உலகம் முழுவதும் கறுப்பினத்தவர் உரிமைகளைப் பற்றிய விவாதத்தினை கிளப்பியது. அதையடுத்து விளையாட்டு வீரர்களின் மத்தியிலும் இதுபோன்று இன வேறுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழத் தொடங்கியது. மேற்கு இந்திய தீவு அணியின் சில வீரர்கள் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை வெளிப்படையாகக் கூறத் தொடங்கினர்.

அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவனான மகாயா நிடினி செய்தியாளர்கள் மத்தியிலும் தானும் இப்படி இன வேறுப்பாட்டுடன் நடத்தப் பட்டேன் என மனம் நொந்து சில செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதுவும் சொந்த அணிக்குள் இப்படி நடத்தப்பட்டேன் எனக் கூறியதுதான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய மகாயா நிடினி இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியின் அசைக்க முடியாத வீரராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மகாயா நிடினி இன வெறுப்புடன் நடத்தப்பட்டது குறித்து வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி காட்டமான கருத்தைக் கூறியிருக்கிறார். “இதுமிகவும் துயரமானது. மகாயா நிடினிக்கு இது ஏன் என்று என்னைப் போலவே புரியவில்லை. தனிமையிலிருந்து அவர் ஓடியே போயிருக்கிறார். அவரது சக வீரர்கள் மேல் இருந்த மதிப்பு போய்விட்டது. அந்த வீரர்கள் நினைத்து வெட்கப் படுகிறேன். நிடினி நீங்கள் எங்களுக்கு எப்பவுமே ஹீரோதான்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

மகாயா நிடினி விஷயத்தில் காட்டமான கருத்து தெரிவித்து இருக்கும்  டேரன் சமி முன்னதாக இந்தியாவில் தானும் இனவெறுப்புக்கு ஆளானதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தகக்து. தற்போது கறுப்பினத்தவர் வாழ்க்கை முக்கியம் என்ற அமைப்பின் தலைவராக டேரன் சமி இயங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகவும் முழுமையாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று காலை முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில்

மனைவி குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவன்!

ஆந்திர மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிபரையே வசைமாறிப் பொழியும் ஜோ பிடன்: அமெரிக்க அரசியல் நடக்கும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை விட தீவிரமாக அரசியல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

75 ஆண்டு ஐ.நா வரலாற்றில் இதுவே முதல்முறை: பொதுக்குழுக் கூட்டம் பற்றிய பரபரப்பு அப்டேட்!!!

ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க விருக்கிறது.

லாக்டவுனுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தமிழக அரசு!!!

சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணமாக நகரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இயலாத காரியம்.