இணையத்தில் லீக் ஆனது 'தளபதி 62' பட டைட்டில்?

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் 'வேற லெவல்' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்று போட்டோஷாப் மூலம் படத்தின் டைட்டில் போஸ்டரை அடித்து இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இன்னொரு விஜய் ரசிகர் ஒரு போஸ்டரை தயார் செய்துள்ளார். அதில் 'இது டைட்டில் இல்லடா' என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இயக்குனர் சி.எஸ்.அமுதல் #ஒரே லெவல் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து இந்த டூப்ளிகேட் டைட்டிலை தனது பாணியில் கலாய்த்துள்ளார்.

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் இந்த டைட்டில் உண்மையான டைட்டில் இல்லை என்றும், நிஜமான டைட்டிலை தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் இன்று மாலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? ராகுல் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

விஜய்யை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று நடைபெற்றது. அதேபோல் நேற்றுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா'

சாக்கடையை பற்றி பேச வேண்டாம்: பாலாஜி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்பதை பார்வையாளர்கள் ஊகித்துவிட்டனர்.

கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக

சின்னத்திரை நடிகை நிலானி திடீர் கைது! 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் பல நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் திடீரென வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு