இது பிக்பாஸா? மாயாபாஸா? ஃபுல் பார்மில் இருக்கும் அர்ச்சனா,,!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில் கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின்னர் தற்போது ஆவேசம் ஆகியுள்ளார்.

பிரதீப் இருந்திருந்தால் கூட மாயா பூர்ணிமா கேங்கை இந்த அளவுக்கு கதறவிட்ட இருக்க முடியாது. அவர் விட்ட வேலையை அர்ச்சனா தொடர்ந்து செய்து வருவதாக தெரிகிறது.

மேலும் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்களை கேப்டன் பொறுப்பில் இருக்கும் மாயா அலட்சியப்படுத்தி வரும் நிலையில் அவருக்கு சரியான பதிலடியை அர்ச்சனாவும் விசித்ராவும் கொடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் ‘பிக் பாஸ் என்ற பெயர் வைப்பதற்கு பதிலாக மாயா பாஸ் என்று வைத்திருக்கலாம், நாளைக்கு ஒருவேளை மாயா டைட்டில் வின்னராகிவிட்டார் என்றால் இத்தனை பேரை எமோஷனலாக காலி பண்ணிட்டு இந்த டைட்டிலை பெறுகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா?

மாயா கேப்டன் ஆக வந்தால் சரியாக போட்டியாளர்களை ஹேண்டில் பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இப்படி நடப்பார் என்று நான் நினைக்கவே இல்லை, ரொம்ப சீப்பாக நடந்து கொள்கிறார். இவர்களுக்கும் ரெட் கார்டு வாங்கி போனவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’ என்று அர்ச்சனா ஆவேசமாக கூறும் காட்சி உள்ளது. மொத்தத்தில் அர்ச்சனா தற்போது ஃபுல் ஃபார்மில் இருப்பதாக தெரிகிறது.

More News

'தளபதி 68' பட இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு விடுமுறை: தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு..!

இயக்குனர் வெங்கட் பிரபு விறுவிறுப்பாக 'தளபதி 68' படத்தை இயக்கி வரும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு விடுமுறை அளித்துள்ளார்.

மெகா இசை வெளியீடு.. பான் - இந்தியா புரமோஷன்.. 'கேப்டன் மில்லர்' படக்குழுவின் மாஸ் பிளான்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல் இப்படி சொல்லி கடந்து போயிருக்கலாம்: பிரதீப் விவகாரம் குறித்து முன்னாள் டைட்டில் வின்னர்..!

 பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

தொடரும் மாயாவின் அடாவடி கேப்டன்சி.. ஃபார்ம் ஆகியது விசித்ரா குரூப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டு மூன்று நாட்கள் ஆனாலும் இன்னும் அவரைப் பற்றி தான் பேச்சு நடைபெற்று வருகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் இல்லாத குறையை

ஐஷுவிடம் எல்லை மீறும் நிக்சன்.. இதெல்லாம் 'வுமன் சேஃப்டியில் வராதா?

பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தான் மாயா மற்றும் பூர்ணிமா குரூப் அவரை சதி செய்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டதாக குற்றஞ்சாப்பட்டுகிறது.