எஸ்.வி.சேகர் தலைமைறைவா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,April 22 2018]

பெண் பத்திரிகையாளர்களை தனது முகநூலில் தரம் தாழ்ந்த ஒரு கருத்தை தெரிவித்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையாளர்கள் உள்பட அனைத்து துறையினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவருக்கு முன் ஜாமீன் எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யப்படுவாரா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கொச்சைத்தனமான கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகை துறையினர் மட்டுமின்றி

பேட்டி தர பணம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர்களுக்கு செலவினை குறைக்கும் வகையில் முடிவெடுக்க இன்று நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது

அம்பானி மருமகளுக்காக சென்னையில் தயாராகும் பல லட்சங்கள் மதிப்பு முகூர்த்த புடவை   

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தா என்பவரை வரும் டிசம்பரில் திருமணம் செய்ய போகிறார்

ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்த ஸ்ரீரெட்டி

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அடுத்து சிக்க போவது யார்? என்பதை நினைத்து தெலுங்கு திரையுலகமே

சாய்பல்லவி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பிரேமம்' படம் மூலம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி.