சசிகலா வீட்டில் திடீரென குவிந்த அதிமுக மூத்த நிர்வாகிகள். நடப்பது என்ன?

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல்வர் பணியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா வகித்த வந்த இன்னொரு சக்திவாய்ந்த பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்ததை அடுத்து இன்று அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் சசிகலா தங்கியுள்ள போயஸ் கார்டனுக்கு விரைந்தனர். செங்கோட்டையன், வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி, உள்பட பலர் சற்று முன் போயஸ் கார்டன் சென்று சசிகலாதான் அடுத்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது, 'அதிமுக பொதுச்செயலாளராக சின்னம்மாதான் வரவேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். எங்களுடைய அன்புக்கட்டளையை ஏற்று சின்னம்மா கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள அதிமுகவை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

More News

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார். ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும் சரி, இறுதி சடங்கு செய்த போதும் சரி, ஜெயலலிதா...

பல்கேரிய போலீசிடம் சிக்கிய சில்வாவை அஜித் காப்பாற்றினாரா?

வழக்கமாக அஜித் பட செய்திகள், அஜித்தின் புதிய ஸ்டில்கள்தான் டிரெண்டில் இருக்கும். ஆனால் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்...

கணேஷ் என் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. விவாகரத்து குறித்து நடிகை ஆர்த்தி

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது...

ஏடிஎம் மிஷினுக்கு திதி. பிரதமருக்கு லட்டு பிரசாதம் அனுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார்? பொன்னையன் தகவல்

மறைந்த செல்வி ஜெயலலிதா வகித்த வந்த அதிகாரம் மிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்...