காதலருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வது ஒன்றும் புதிதில்லை. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கணவன், மனைவியாகிய பாலஜி-நித்யா கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு நடிகை தனது காதலருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சர்ச்சை நடிகை என்ற பெயரை பெற்றவர் ராக்கி சாவந்த். இவர் சல்மான்கான் விரைவில் நடத்தவிருக்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது பாகத்தில் காதலர் தீபக்குடன் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான சல்மான்கானுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது காதலர் தீபக்குடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் வரும் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருசில நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்தாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பிரபல நடிகரை புகைப்படம் எடுக்க மறுத்த பத்திரிகையாளர்கள்!

நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் , சமீபத்தில் தனிப்பட்ட வகையில் சொந்த பணியில் இருந்தபோது ஒரு பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்திருந்தார்.

இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து!

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

காண்ட்ராக்டர் நேசமணிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார்

அஜித்தின் அரசியல் பார்வை குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்

அஜித்துக்கு அரசியல் பார்வை மட்டுமே இருப்பதாகவும், அரசியல் ஆசை இல்லை என்றும் பிரபல ஊடகவியலார் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?

சூர்யாவுடன் சாய்பல்லவி நடித்த 'என்.ஜி.'கே' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.