ஷங்கர், முருகதாஸை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,April 12 2020]

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர்களை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களாக ஷங்கர் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகிய இருவரும் முன்னணி இடத்தில் உள்ளனர். ஷங்கர் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் ஏஆர் முருகதாஸ் சமீபத்தில் வெளியான ’தர்பார்’ படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷங்கர், முருகதாஸைவிட கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளம் வாங்கும் இயக்குனராக ராகவா லாரன்ஸ் உள்ளதாக ஆச்சரியமான செய்திகள் வெளியாகி உள்ளது தற்போது அவர் அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கி வரும் ’காஞ்சனா’ என்ற தமிழ் படத்தின் ரீமேக் படமான ’லட்சுமிபாம்’ திரைப்படத்திற்கு அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் 50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஷங்கர், முருகதாஸ் ஆகியோர்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளம் பெறும் இயக்குனராக ராகவா லாரன்ஸ் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்ததால் அவரது சம்பளம் திடீரென உயர்ந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

முன்னணி இயக்குனர்களை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்

அட்லியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்த 'ராஜா ராணி' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில் ஆகிய

முதல்முறையாக பெண்களின் பாராட்டுக்களை பெற்ற ஸ்ரீரெட்டி வீடியோ

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதும், ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும்,

ஊரடங்கு முடிந்தாலும் சுய கட்டுப்பாடு வேண்டும்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் பிரச்சனை, ஊரடங்கு பிரச்சனை ஆகியவை முடிந்தபின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்க்கு திரும்பியதுடன் என்ன நடக்கும் என்பது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர்.

சாணி மேல தள்ளி விட்டுட்டாங்களே: ஆர்ஜே மணிமேகலை புலம்பல்

பிரபல ஆர்ஜே மணிமேகலை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தனது சொந்த கிராமத்தில் இருந்து கொண்டு வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில்