close
Choose your channels

திருமணத்திற்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்: இணையத்தில் பரவும் தகவல்

Friday, October 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது என்பதும், அதன் பின்னர் கடந்த பல ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதல் ஜோடி, அதன்பிறகு கோவா சென்று விக்னேஷ்சிவன் பிறந்த நாளை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. தேசிய விருது பெற்ற பின்னர்தான் தனக்கு திருமணம் என நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக இந்த வதந்தி கூறுகிறது. ஏற்கனவே ’அறம்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இனிமேல் அவருக்கு எப்போது தேசிய விருது கிடைப்பது? அதன் பிறகு எப்போது திருமணம் நடப்பது? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment