சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகை ப்ரீத்தி சர்மா.

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

ப்ரீத்தி சர்மா ஒரு இந்திய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை ஆவார்.சித்தி 2 சீரியலில் வெண்பாவாக தன் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர்.

இவர் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார் மற்றும் அறுவடை திரைப்படத்தில் நடித்துள்ளார்.டிக் டாக் பான் செய்வதற்கு முன்பு வரை அதில் பிரபலமான ஒருவராக இருந்தார்.நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் படிப்பை நிறுத்தி விட்டு மாடலிங் துறையில் நுழைந்தார்.மேலும்,

மிஸ் கைத்தறி போட்டியில் 2017 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.இவர் தற்போது சன் டிவியில் மலர் சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்தார்.ஆனால் இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்றில் நான் சீரியலை விட்டு விலக போவதாக கூறி இருந்தார்.

பொதுவாகவே ஒரு சீரியலில் ஒரு கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு கதாபாத்திரத்தை ஒரு சில காரணங்களுக்காக நடிக்க வைப்பது வாடிக்கை.அதிலும் துணை கதாபாத்திரம் மாறுவதே அந்த சீரியலுக்கு ஒரு பாதிப்பை கொடுக்கும்.

ஆனால் ப்ரீத்தி சர்மா மலர் சீரியலின் முக்கிய கதாநாயகி பாத்திரத்தில் நடித்து தற்போது விலகுவது பலரை வருத்தத்திற்கு ஆழ்த்தியுள்ளது.

More News

'கூலி' படத்தில் இணையும் இன்னொரு 'விக்ரம்' பிரபலம்.. 'தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் மாஸ் பிசினஸ்.. அடுத்தடுத்து இனி வெற்றிப்படங்களா?

ஜெயம் ரவி நடித்த சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் ஆகி உள்ளதை அடுத்து ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு

நண்பரின் உடலை பார்த்து கதறி அழுத பா. ரஞ்சித்.. அதிர்ச்சி வீடியோ..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய நெருங்கிய

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. தவெக விஜய்யின் கண்டனம்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து

பார்த்திபன் போலீஸ் புகார் எதிரொலி.. 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்குப்பதிவு செய்த சிவ பிரசாத்..!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'டீன்ஸ்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த சிவ பிரசாத் என்பவர்