பணப்பெட்டியை நோக்கி செல்லும் ஆரி: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி ஆப்சன் கொடுக்கப்படும் என்பதும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு விலகிக் கொள்ளலாம் என்ற ஆப்ஷன் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்பதும் கடந்த சீசனில் கூட பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கவின் போட்டியில் இருந்து விலகி வெளியே சென்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அதே போன்ற ஒரு ஆப்ஷன் இந்த சீசனிலும் வரவிருப்பதாகவும் பணப்பெட்டியை ரம்யா பெற்றுக்கொண்டு வெளியேறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இது குறித்த புரோமோ விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் ரூபாய் 5 லட்சம் பண பெட்டியை வைத்து பிக்பாஸ் ஆப்சன் கொடுப்பதாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஒருவர் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கும் காட்சியும் உள்ளது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டைட்டில் வின்னர் என மக்களால் உறுதி செய்யப்பட்ட ஆரி, 5 லட்சம் கொண்ட பணப்பெட்டி அருகே சென்று சில வார்த்தைகள் பேசும் காட்சிகளுடன் இன்றைய 2-வது புரமோ முடிவடைந்ததால் ஆரியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஆனால் அவர் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறாரா? அல்லது பணப்பெட்டியை யாரும் எடுக்க வேண்டாம், அனைவரும் விளையாடி யாருக்கு திறமை இருக்கின்றதோ அவர்கள் டைட்டில் வின் பண்ணுவோம் என்று அறிவுரை கூறுகிறாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே.

நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு வார்த்தையால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றார்கள்

பிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கடந்த ஞாயிறன்று சிங்கப்பெண்ணாக வெளியே சென்றார் என்பது தெரிந்ததும் அவர் இருந்த 95 நாட்களில் கடைசி வாரம்

பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றிய காதலனை பின்னால் இருந்தே கத்தியால் குத்திய காதலி… அதிர்ச்சி சம்பவம்!!!

ஆந்திர மாநிலத்தில் காதலுடன் பைக்கில் சென்ற காதலி ஒருவர் பின்னால் இருந்தே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.