close
Choose your channels

'இரும்புக்கை மாயாவி' சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.. லோகேஷ் கனகராஜ் ஆச்சரிய தகவல்..!

Saturday, October 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா, இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒன்று ’ரோலக்ஸ்’ மற்றொன்று ’இரும்புக்கை மாயாவி’ என்றும் கூறப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் அதன் பின் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்றும் அதனை அடுத்து அவர் சூர்யாவின் இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இரும்புக்கை மாயாவி’ குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’ஆரம்பத்தில் ’இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தின் கதையை நான் கார்த்தி அவர்களுக்காக எழுதினேன் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் இந்த கதையை சூர்யாவுக்காக மாற்றி எழுதுங்கள் என்று கூறிய பின்னரே சூர்யாவுக்காக சில காட்சிகளை மாற்றி எழுதி வைத்துள்ளேன். ‘மாநகரம்’ படத்தை முடித்தவுடன் இந்த படத்திற்காக 7 மாதங்கள் நான் வேலை செய்தேன், ஆனால் இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி இருந்ததால் அப்போது எனக்கு இந்த படத்தை எடுக்க தயக்கமாக இருந்தது என்று கூறினார்.

ஆனால் தற்போது இந்த படத்தை இயக்கும் அளவுக்கு எனக்கு மன உறுதி ஏற்பட்டுள்ளதால் விரைவில் அந்த படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment