'இரும்புக்கை மாயாவி' சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.. லோகேஷ் கனகராஜ் ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா, இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒன்று ’ரோலக்ஸ்’ மற்றொன்று ’இரும்புக்கை மாயாவி’ என்றும் கூறப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் அதன் பின் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்றும் அதனை அடுத்து அவர் சூர்யாவின் இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இரும்புக்கை மாயாவி’ குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’ஆரம்பத்தில் ’இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தின் கதையை நான் கார்த்தி அவர்களுக்காக எழுதினேன் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் இந்த கதையை சூர்யாவுக்காக மாற்றி எழுதுங்கள் என்று கூறிய பின்னரே சூர்யாவுக்காக சில காட்சிகளை மாற்றி எழுதி வைத்துள்ளேன். ‘மாநகரம்’ படத்தை முடித்தவுடன் இந்த படத்திற்காக 7 மாதங்கள் நான் வேலை செய்தேன், ஆனால் இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி இருந்ததால் அப்போது எனக்கு இந்த படத்தை எடுக்க தயக்கமாக இருந்தது என்று கூறினார்.

ஆனால் தற்போது இந்த படத்தை இயக்கும் அளவுக்கு எனக்கு மன உறுதி ஏற்பட்டுள்ளதால் விரைவில் அந்த படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

More News

அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்? அவரே அளித்த பதில்..!

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதனை அடுத்து  விஜய், சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களை இயக்கும் அளவிற்கு தற்போது உச்சத்தில் உள்ளார்.

தண்ணீர் பிரச்சனையை அரசியலுடன் கலந்து பேசிய கமல்ஹாசன்.. பிக்பாஸில் இன்று சம்பவம் இருக்கு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் ரசிக்கும் 4 சூப்பர் ஸ்டார்கள்..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

விசித்ரா, யுகேந்திரன், ரவீனாவை விட அதிக சம்பளம்.. ஆனால் இப்படி ஆயிருச்சே..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் சண்டை சச்சரவுடன் விளையாடி வருகின்றனர்.

க்யூட்டாக மாட்டுப்பால் கறக்கும் தமிழ் சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!

 தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகை தனது மாட்டு பண்ணையில் க்யூட் ஆக பால் கறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.