close
Choose your channels

மைக் டைசனுக்கு 'இறுதிச்சுற்று' தயாரிப்பாளர் எழுதிய நன்றிக்கடிதம்

Thursday, February 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் ரிலீஸான மாதவனின் 'இறுதிச்சுற்று' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க விரும்பியதாக கூறியதை அடுத்து உலகின் கவனம் முழுவதும் இந்த படத்தின் மீது திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'இறுதிச்சுற்று' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'Y Not studios' நிறுவனம் மைக் டைசனுக்கு நன்றிக்கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் 'நீங்கள் எங்கள் நிறுவன தயாரிப்பான 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க விரும்பியதாக கூறியதற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தங்களுக்கு வசதியான நாளில் இந்த படத்தை உங்களுக்காக திரையிடுவதில் பெருமை கொள்கிறோம். மேலும் வட அமெரிக்க பாக்ஸிங் அசோசியேஷன் நிறுவனத்துடன் இணைந்து உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். நீங்கள் படம் பார்க்கும் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்' என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.


மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதராவி, காளிவெங்கட் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதா கொங்கார பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.