பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

இயக்குனர் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் அளவில் நல்ல வெற்றியையும் பெற்ற நிலையில் அவர் தயாரிக்கவிருக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் ரஞ்சித் தனது அடுத்த தயாரிப்பு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். இதன்படி இந்த படத்தின் டைட்டில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகும். இந்த படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்கவுள்ளார்.

ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் நாயகன் தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கிறார். செல்வா படத்தொகுப்பில் தா.ராமலிங்கம் கலை இயக்கத்தில் சாம் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது.

 

More News

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சிவாஜி, கமல் படங்களுக்கு பின் ஜெயம் ரவி படத்தில் புதுமை

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு படத்திற்கு பாடல்கள் மிக முக்கியம். ஒரு படத்தின் பாடல்கள் நல்ல வெற்றி பெற்றிவிட்டால் அந்த படம் பாதி வெற்றி பெற்ற மாதிரி என்று கோலிவுட்டில் கூறுவதுண்டு.

'பேட்ட' டிராக்லிஸ்ட் இன்று வெளியீடு: இத்தனை பாடல்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பாடல்கள் நாளை மாலை வெளியாகவுள்ள நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் பாக படங்களும் இடத்தை நிரப்பும் குப்பைகளும்

வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நடைமுறை. தமிழில் திடீரென உருவாகும் சில ட்ரெண்டை போல, இப்போது இந்த இரண்டாம் பாக விஷயமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறத

அஜித்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி, இதற்கு முன்பும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்