ஹைத்ராபாத்தில் ஐபிஎல்லை மையமாக வைத்து சூதாட்டம்; 730 கோடியை தாண்டும் என அதிர்ச்சி!!!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டிகளை மையமாக வைத்து இளைஞர்கள் சூதாட்டங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹைத்ராபாத்தில் மட்டும் இதுவரை 730 கோடி ரூபாய் மதிப்பிலான சூதாட்டங்கள் நடைபெற்று இருக்கலாம் என ஹைத்ராபாத் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் சஜ்ஜார் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடைபெறும் சூதாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பல இளைஞர்கள் கடன் வாங்குவதாவும் பெற்றோர்களின் பணத்தை திருடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களை அடமானம் வைத்து இளைஞர்கள் சூதாட்டங்களில் கலந்து கொள்வதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்து உள்ளனர். இப்படி இளைஞர்களை வைத்து சூதாட்டத்தை நடத்துவதற்காக புதுப்புது செயலிகளும் உருவாக்கப்படுகின்றன என்று சைபர் கிரைம் தெரிவித்து உள்ளது.

மேலும் ஹைத்ராபாத்தில் உள்ள பஷீராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் இதேபோன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அந்தக் கும்பலின் தலைவன் சுஷாந்த் என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 22.89 லட்சம் ரூபாய் கைப்பற்றி உள்ளனர். மேலும் சூதாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட செயலி மற்றும் செல்போன்களை போலீசார் முடக்கியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஐபில் தொடர்பான சூதாட்டங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வதாக ஹைத்ராபாத் சைபர் கிரைம் கவலை தெரிவித்து உள்ளது.

More News

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும்

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென

இரண்டாவது நாளிலும் 'மேன் ஆஃப் த மேட்ச்: அசத்தும் அறந்தாங்கி நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அசத்திய அறந்தாங்கி நிஷா நேற்று இரண்டாவது நாளிலும் பார்வையாளர்களின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார்

அடுத்த வாரம் நாமிநேஷனில் நான்கு போட்டியாளர்கள்: யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஆரம்பித்து நேற்றைய இரண்டாவது நாளும் முடிவடைந்த நிலையில் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார்