அவர் ரூ.200 கோடிக்கு ஏலம் போயிருப்பார்… வைரலாகும் பதிவிற்கு பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

உலக அளவில் முன்னணி வேகப்பந்து விச்சாளர் என்ற அடையாளத்துடன் அசுர வளர்ச்சி அடைந்துவருகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. இவரைப் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்டபோது பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹித் அப்ரிடி மற்றும் ஹோயப் அக்தர் இருவரும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர். அதற்குப் பிறகு வெளியுறவு பிரச்சனை காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலம் எடுப்பதையே தவிர்த்துவிட்டன.

இந்நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால் ரூ.200 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருப்பார் என்று அந்நாட்டு பிரபல பத்திரிக்கையாளர் இஸ்திஷாம் உல் ஹக் என்பவர் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் உங்கள் கற்பனைக்கு அளவே இல்லையா? ஷாஹீன் அப்ரிடி திறமையான வீரர்தான். ஆனாலும் உங்களது கற்பனை மிகப்பெரிது எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் ஐபிஎல் அணிகளின் ஏலத்தொகையே 90 கோடிதான் என்று பத்திரிக்கையாளர் இஸ்திஷாமை கேலி செய்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி கடந்த 2021 இல் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மேலும் டி20 உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்டு அதிரடி காட்டிய இவர் இந்தியாவுடனான போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்களையும் அவுட்டாக்கி திணறடித்தார். இந்தக் காரணத்திற்காகத்தான் இஸ்திஷாம் தற்போது அவரைத் தூக்கிக் கொண்டாடி வருகிறாரோ என்ற சந்தேகத்தையும் சிலர் இணையத்தில் எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர்களுக்கு ஷங்கர் படக்குழுவினர்களின் எச்சரிக்கை!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

உறவுகள் தொடர்கதை: இசைஞானியுடன் மீண்டும் கங்கை அமரன்!

இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளதாக கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் தனுஷ்: உடனிருக்கும் இளம்பெண் யார்?

இளம்பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி தந்த அதிர்ஷ்டம்… ஒரே டிக்கெட்டில் கோடி ரூபாயை வென்ற இந்திய இளைஞர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்துவரும் இந்திய இளைஞர்

12ஆவது மாடியில் தொங்கி வொர்க் அவுட் செய்த பலே அறிவாளி…  பதற வைக்கும் வீடியோ!

சமீபத்தில் ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 10 ஆவது மாடியில் தொங்கவிட்ட