'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியை அணியின் நிர்வாகம் அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது. அதுமட்டுமின்றி புனே அணி உரிமையாளரின் சகோதரரான ஹர்ஸ் கோயன்கே ஸ்மித்தை புகழ்ந்து தோனியை அவமதித்தும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தோனியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்து வரும் நிலையில் ஹர்ஸ் கோயன்கேவுக்கு தோனியின் மனைவி சாக்சி மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது, எறும்புகளை சாப்பிடும். ஆனால் அதே பறவை இறந்த பின் எறும்புகள் அதை சாப்பிடும். நேரமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறும். அதனால் வாழ்க்கையில் யாரையும் காயப்படுத்த வேண்டாம். நீங்கள் இன்று பலமுடன் இருக்கலாம். ஆனால் காலம் உங்களை விட மிக வலிமையானது. ஒரு மரம் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். ஆனால், ஒரே ஒரு தீக்குச்சி கோடிக்கணக்கான மரங்களை எரித்துவிடும் திறமை கொண்டது. அதனால் நல்லவராக இருக்க வேண்டும் நல்லதை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சாக்சியின் இந்த பதிலடிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More News

மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது - மயில்சாமி

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய தமிழக கவர்னரிடம் திமுக தலைவர்கள் மனு

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை திமுக தலைவர்கள் இன்று மும்பையில் சற்றுமுன்னர் நேரில் சந்தித்தனர்...

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்...

டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிகோலால் குத்தி கொன்ற கணவன்

அழகாக இல்லாததால் கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி செய்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது...

நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடியால் பாதிப்பு வராது. கே.பாக்யராஜ்

கோலிவுட் திரையுலகமே திருட்டு விசிடியால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கையை எடுக்க போவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் விஷாலும் தெரிவித்துள்ளார்...