இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் மியா நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்று நேற்று நாளை 2' படத்தை இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சிவி குமார் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவாக முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

More News

ரியல் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் மன்மோகன்சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ் உள்பட

இயக்குனர் சங்க தேர்தல் தேதி மாற்றம்: புதிய தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை

வரலட்சுமி கூட்டணியில் மிஸ் ஆன த்ரிஷா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை

மகன் இயக்குனராக முழு சொத்தையும் விற்றுக் கொடுத்த பெற்றோர்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இயக்குனர் சுரேந்திரன் இயக்கியிருக்கும் காதல் படம் 'மாயபிம்பம்'. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது

ஜோதிகா பட பாடலை ஜோராக பாடிய சாயிஷா

சூர்யா, ஜோதிகா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'காக்க காக்க' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஒன்றா இரண்டா'