62 பயணிகளுடன் மாயமான இந்தோனேஷிய விமானம் என்ன ஆனது? வெளியான பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று திடீரென மாயமானது. ஜகார்த்தா கடற்கரையில் கிடைத்த சில விமானப் பொருட்களுடன் மீனவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி பின்னர் விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து அதில் பயணம் செய்த 62 பயணிகளின் நிலை குறித்த பதட்டம் அதிகரிக்கவே, அவர்களை தேடும் பணியும் தொடங்கியது.

ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு சென்ற பயணிகள் விமானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 62 பயணிகள் இருந்தனர். ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நேற்று மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த விமானம் ஜாவா கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் அங்கு தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.

அதையடுத்து தற்போது விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அங்கு சிதைந்த மனித உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் தற்போது ஜாவா கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைப்பினர் தகவல் கொடுத்து உள்ளனர். இதனால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடித்து விடலாம் எனவும் இந்தோனேஷிய அதிகாரிகள் நம்பிக்கை அளித்து உள்ளனர். ஆனால் மாயமான பயணிகளின் நிலையை குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'அப்பதான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும்': அருண்விஜய்யின் 'சினம்' டீசர்

அருண் விஜய் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய 'சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது 

கோவை வந்த சமந்தா யாரை சந்தித்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கோவை வந்து அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

உயிருக்குப் போராடும் இயக்குநர் பாரதிராஜா ஹீரோ? மனதை உலுக்கும் வைரல் வீடியோ!!!

சினிமா ஒரு மாயக்கண்ணாடி என்பது பெரும்பாலான நேரங்களில் உண்மையாகத்தான் இருக்கிறது.

அன்பு குரூப்புக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பா? சனம், அனிதா எங்கே?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் மற்ற போட்டியாளர்களை வெளியேற்றிக்கொண்டு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் ஒரு வழியாக அன்பு குரூப் கடைசி நேரத்தில்

ஆர்ப்பாட்டமான மக்களின் வரவேற்பும், அசிங்கமான அரசின் வரவேற்பும்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று முதல் தனது 5வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்