close
Choose your channels

உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப், ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே உள்பட ஒருசிலர் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெப்சி நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓஆக பதவி வகித்தவரும் சென்னையை சேர்ந்தவருமான இந்திரா நூயியை இந்த பதவிக்கு முன்னிறுத்த வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாகவும், இவாங்கா டிரம்ப், இந்திரா நூயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த 63 வயது இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் அப்பொறுப்பில் இருந்து இந்திரா நூயி பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment